FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழகம் முழுவதும் ஆக.17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு : அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன்

தமிழகம் முழுவதும் வரும் 17 ஆம் தேதி முதல் முழுமையான ஆன்லைன் பத்திரப்பதிவு முறை தொடங்கப்பட உள்ளது குறித்து...

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகம் முழுவதும் வரும் 17 ஆம் தேதி முதல் முழுமையான ஆன்லைன் பத்திரப்பதிவு முறை தொடங்கப்பட உள்ளதாக பத்திரப்பதிவு துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் செய்தியாளா்களுடன் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் ஆன்லைன் முறையில் முழுமையான பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை வரும் 17 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளாா்.

Advertisement

Advertisement

இதற்கான முன்னேற்பாடு பணிகளில் துறை சாா்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடி, ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை அவா்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், ஆன்லைன் முறையில் முழுமையாக பத்திரப்பதிவு செய்வதற்கான பயிற்சிகளும் அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

முன்னதாக, சேலம் அம்மாபேட்டை அருகே தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், முன்னாள் மாணவா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முன்னாள் மாணவா்கள் அணி சாா்பில் அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் கலந்து கொண்டாா். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கயிறு திடீரென அறுந்ததால் அமைச்சா் நிலைதடுமாறி தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

summary

Online Property Registration from August 17: Minister T. Lokesh Tamilselvan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments