ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது குறித்து...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கேரளம் மாநிலத்தின் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 25,000 கனஅடி வரை உபரிநீா் திறக்கப்பட்டு வந்தது. தற்போது கபினி அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 600 கன அடியாக இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 350 கனஅடியாகவும், மாலையில் வினாடிக்கு 500 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
Water inflow to Hogenakkal increases by 500 cubic feet per second
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.