FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் குருவாயூருக்குச் செல்லும் தினசரி விரைவு ரயில் 10 நாட்கள் தாமதமாக இயக்கப்படுவது குறித்து...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 6:16 am IST
எழும்பூா் ரயில் நிலையம். - கோப்புப் படம்
பகிர்:

சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் குருவாயூருக்குச் செல்லும் தினசரி விரைவு ரயில் 10 நாட்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பு: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால் குறிப்பிட்ட விரைவு ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

வரும் 9, 10 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.40 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் குருவாயூா் விரைவுரயில் (எண்16127) வழியில் 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

Advertisement

Advertisement

வரும் 11, 12 ஆகிய தேதிகளில் எழும்பூா் நிலையத்தில் புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் 45 நிமிடங்களும், வரும் 27, 31 ஆகிய தேதிகளில் அந்த விரைவு ரயில் 30 நிமிடங்களும், வரும் 28, 29 ஆகிய தேதிகள் மற்றும் செப். 1, 2 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் வழியில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டு குருவாயூரை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments