செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்த உதயநிதி!
செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் இறங்க மறுப்பு தெரிவித்த நிலையில், சிறிது நேரத்துக்கு பிறகு விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைப்பு அளித்தது குறித்து...
தஞ்சை நகர காவல் நிலையத்திற்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து தஞ்சை தெற்கு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்திருந்ததால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றம் உத்தரவிட்ட காவல் நிலையத்திற்கு பதிலாக வேறு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதால், காவல் துறை வாகனத்தில் இருந்து உதயநிதி இறங்க மறுப்பு தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து எ.வ. வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மட்டும் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உதயநிதியுடன் ஆலோசித்த பிறகு, காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைத்து உதயநிதி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்.
Udhayanidhi stalin cooperated with the inquiry at the Sengipatti police station
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.