FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதலில் மறுப்பு; பிறகு சம்மதம்... செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதியிடம் விசாரணை!

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளது குறித்து...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 7:12 pm IST
செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட உதயநிதி ஸ்டாலின் - எக்ஸ்
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தஞ்சை தெற்கு நகர காவல் நிலையத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்திருந்ததால், செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை அழைத்துச் சென்றனர்.

தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வேறு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்த உதயநிதி, மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு காவல் துறை விசாரணைக்கு சம்மதித்து வாகனத்தில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் சென்றார். அங்கு அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

சென்னையில் காலை 10 மணிக்கு உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில், மாலை 6.45 மணிக்கு காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

summary

Initial refusal, then consent... DMK Udhayanidhi stalin questioned at Sengipatti police station

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments