FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரியலூர் மாவட்டத்துக்கு ஆக. 10-ல் உள்ளூர் விடுமுறை!

அரியலூர் மாவட்டத்துக்கு ஆக. 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:51 pm IST
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில். - கோப்புப்படம்
பகிர்:

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெறவுள்ள மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு ஆக. 10 அன்று அரியலூர் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அன்றைய நாள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத் தேர்வுகள், அரசுப்பணியாளர் தேர்வுகள் உள்ளிட்ட பிற தேர்வுகள் முன்பு அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, மாற்றமின்றி நடைபெறும்.

Advertisement

Advertisement

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும்.

உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் ஆக. 22ம் தேதி(சனிக்கிழமை) அன்று முழு வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

summary

A local holiday has been declared on August 10 for all government offices in Ariyalur district on the occasion of the 'Aadi Thiruvathirai' festival marking the birth anniversary of Emperor Rajendra Chola which is set to take place at the Gangaikonda Cholapuram Peruvudaiyar Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments