தொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!
தொகுதி மறுவரையறை தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு அளித்திருப்பது பற்றி...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று (ஆக. 12) புதன்கிழமை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். இந்தத் தனித் தீர்மானத்துக்கு விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
பாஜக, பாமக, தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகள் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
”தொகுதி மறுவரையறையால் எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுவரையறை கொண்டு வந்தால் தென்னிந்தியாவுக்கு எவ்வளவு பாதிப்பு என்று நாட்டுக்கே வெளிப்படுத்தியவர் எங்கள் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின்தான்.
கடந்த ஆட்சியில் தனித் தீர்மானம் கொண்டுவந்த அப்போதைய முதல்வர், தென்னிந்திய மாநில முதல்வர்களுக்கு கடிதமும் எழுதியிருந்தார். நியாயமான தொகுதி மறுவரையறை என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் கூட்டம் நடத்தினோம். அப்போது தொகுதி மறுவரையறை நடவடிக்கையை அடுத்த 20 ஆண்டுகள் நடத்தக் கூடாது என்று தெரிவித்தோம்.
தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து போராட்டம் நடத்தினோம். திமுக காட்டிய எதிர்ப்புதான் நாடாளுமன்றத்தில் மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம்.
தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
33 சதவிகிதம் மகளிர் இடஒதுக்கீட்டை திமுக முழுமையாக ஆதரிக்கிறோம். 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை திமுக வரவேற்கிறது” எனத் தெரிவித்தார்.
DMK supports the separate resolution on constituency delimitation!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.