அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!
சென்னையில் நடைபெறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு பற்றி...
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்களின் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் தென்மண்டலக் குழுவின் 31-ஆவது கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கேரள முதல்வர் வி.டி. சதீஷன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதால், அம்மாநிலம் சார்பில் துணை முதல்வர் பங்கேற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த மாநாட்டை புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி புறக்கணித்திருக்கும் நிலையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டுள்ளார்.
மாநாட்டின் விவரம்
மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-இன் சட்டப் பிரிவுகள் 15 முதல் 22-இன் கீழ், தென்மண்டலக் குழு உள்பட ஐந்து மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில், தென்மண்டலக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்படுகிறார். சுழற்சி அடிப்படையில், இந்த முறை தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் இக்குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
இந்த மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள், ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் தொடர்புடைய விவகாரங்கள், நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம், விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி தொடர்பான பொதுவான மாநில விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளன.
A conference of Chief Ministers from southern states, chaired by Amit Shah, has begun!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.