உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்
மாணிக்கம் தாகூருக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்.....
நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை அமைச்சர் தயாராக இருந்ததாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எங்கள் உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது நீங்கள் தான், மாணிக்கம் தாகூர் அவர்களே!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பார்த்து "நழுவி ஓடுகிறார்" என்று நீங்கள் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை அமைச்சர் தயாராக இருந்தபோது, "நேருக்கு நேர் நின்று விவாதிக்கத் தைரியமில்லாமல்" சபைக்கு வரமாட்டேன் என ஓடி ஒளிந்தது உங்கள் 'இளம்' தலைவர் ராகுல் காந்தி தான் என்பதை இந்த நாடே அறியும். (எங்கள் உள்துறை அமைச்சர் விவாதத்திற்கு அழைப்பு விடுத்த காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன், பார்த்துத் தெரிந்து கொள்ளவும்).
Advertisement
Advertisement
நாடாளுமன்றம் நடைபெறும் மிக முக்கியமான நேரத்தில் கூட வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றுவிடும் ‘பார்ட்-டைம்’ அரசியல்வாதியைத் தலைவராக வைத்துக்கொண்டு, நீங்கள் இப்படிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை 2014 முதல் 2024 வரையிலான இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ‘கூகுள்’ செய்து பார்த்தாலே தெரிந்துகொள்ளலாமே! அதனை விட ஒரு பெரிய ஆதாரம் வேண்டுமா என்ன?
'வாள் ஏந்தியவர்கள் அஞ்சப்போவதில்லை' என்று வசனம் பேசுகிறீர்கள். மாணிக்கம் தாகூர், உங்கள் கையில் இருப்பது எஃகு வாள் அல்ல; அட்டை கத்தி. மேலும், வடிவேலு பாணி நகைச்சுவை பற்றிப் பேசுகிறீர்கள்... ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் 'EVM இயந்திரத்தில் கோளாறு' என்று நீங்கள் சொல்லும் சாக்குப்போக்குகளை விடச் சிறந்த நகைச்சுவை வேறு இருக்க முடியுமா என்ன? என்று தெரிவித்துள்ளார்.
BJP State President Nainar Nagendran stated that the Home Minister was prepared to answer all questions raised in Parliament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.