அமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவு
அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரட்டது குறித்து...
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரட்டுள்ளது.
முதல்வர் விஜய் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்-நினோ பாதிப்பினால் மழைப் பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக நாளை (ஆக. 30) முதல் செப். 7 வரை, நாளொன்றுக்கு, வினாடிக்கு 1000 கன அடி வீதம் 8 நாள்களுக்கும் போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாள்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
Water release from Amaravati Dam to begin tomorrow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.