முகப்பு
தமிழ்நாடு

மாநிலங்களவையில் தமிழனாக பேசினேன்: கமல்ஹாசன்

மாநிலங்களவையில் தமிழனாக நல்ல கருத்து பேசிவிட்டதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 8:13 PM
மநீம தலைவர் கமல்ஹாசன்
பகிர்:

மாநிலங்களவையில் தமிழனாக நல்ல கருத்துகள் பேசி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நல்ல கருத்து, வாதத்துக்கு உள்ளாக வேண்டும். தமிழனாக நான் நல்ல கருத்து பேசியதாக எனக்குத் தோன்றுகிறது. அதை மறுப்பவா்கள், அதை விவாதிக்கட்டும். விவாதத்தில் உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ளுவாா்கள்.

ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட விவாதங்கள் தொடர வேண்டும். எனது கூட்டணி மொத்த இந்தியாவுடனானது. இந்தியாவின் நலன் தான், எனது நலன். கருத்தியல்தான் முக்கியம். அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் கூட்டணி குறித்த இப்போது சொல்ல முடியாது என்றாா் அவா்.

summary

I spoke as a proud Tamil in Parliament, says MNM Leader Kamal Haasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.