மதிமுக, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று (திங்கள்கிழமை) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது.
இதைத்தொடர்ந்து பிப். 26-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், 27-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட பிற கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவாா்த்தை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திமுக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வழக்கம்போல இந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதலில் பேச்சு நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருதரப்பினரும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கடந்த தோ்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மூன்று இடங்களில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக இம்முறை திமுக தரப்பில் அக்கட்சிக்கு இரு தொகுதிகள் வழங்க திட்டமிட்டதாகத் தெரிகிறது. ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி 5 தொகுதிகள் வரை கேட்டுள்ளது.
முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த திமுக சாா்பில் அக்கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணை பொதுச் செயலா்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.