FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இறுதிப் பட்டியல்: தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி!

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 23 பிப்ரவரி 2026, 2:48 pm IST
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.
பகிர்:

தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய வாக்காளா் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியானாலும் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போதுகூட விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380.

ஆண்கள்: 2,77,38,925,

பெண்கள்: 2,89,60,838,

மூன்றாம் பாலினத்தவர்: 7,617.

வாக்காளர்கள் நீக்கம்: 74,07,207

தமிழகத்தில் அக்.27 நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்ஐஆருக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடியாக குறைந்தது. அதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு டிச.19 முதல் பிப்.10 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அவகாசம் தரப்பட்டது. பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் தரப்பட்ட நிலையில் படிவம் 6, மூலம் 27,53,796 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் இறுதிப் பட்டியில் இடம்பெற்றுள்ளதா? என்பதை https://elections.gov.tn.in என்கிற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

summary

Chief Electoral Officer Archana Patnaik said that the total number of voters in Tamil Nadu is 5.67 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments