முதல்வரின் கொத்து பரோட்டா - திமுக தலைவர்களின் சால்னா! வைரலாகும் பேச்சுகள்!
தேர்தலில் திமுகவுக்கு கொத்து பரோட்டா போடப்பட்டதாக முதல்வர் விஜய்யின் விமர்சனத்துக்கு திமுக தலைவர்கள் எதிர்ப்பு குறித்து...
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு கொத்து பரோட்டா போடப்பட்டதாக முதல்வர் விஜய்யின் விமர்சனத்துக்கு திமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் முதல்வர் விஜய் பேசும்போது, கொளத்தூரில் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொத்து புரோட்டா போட்டோம். இனியும் பேசினால் என்னவாகும்? எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் விமர்சனம் குறித்து முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியிருப்பதாவது, தேர்தலுக்கு முன் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக சார்பாக இந்த விஜய்தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க. ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா? என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனிடையே, முதல்வரின் விமர்சனம் குறித்து திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பேசியதாவது, சால்னா கடை விமர்சகர்களுக்கெல்லாம் பதில்கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
DMK leaders oppose CM Vijay's criticism
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.