FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம்!

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

அருண் - கோப்புப்படம்
பகிர்:

ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராக இன்று (ஜூலை 13) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி சி. மகேஸ்வரிக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

ஊழல் கண்காணிப்பு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி சி. மகேஸ்வரி ஐபிஎஸ், ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டு இரு மாதங்கள் கூட ஆகாத நிலையில் பணியிட மாற்றம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Director of the Directorate of Vigilance and Anti-Corruption, Arun, transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments