மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது பற்றி...
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இது தொடர்பாக தேமுதிகவின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 10.00 மணியளவில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார், காவிரி நதிநீர் பிரச்னைக்கு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது மட்டுமே ஒரே தீர்வு எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
The DMDK is set to stage a protest condemning the Karnataka government over the Mekedatu dam issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.