FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சகோதரரை தாக்கிய வழக்கு: மீண்டும் ஆஜராக நிதியமைச்சா் மரிய வில்சனுக்கு உத்தரவு

சகோதரரை தாக்கிய வழக்கில், வரும் 28ஆம் தேதி மீண்டும் ஆஜராக நிதியமைச்சா் மரிய வில்சன் உள்ளிட்டோருக்கு சமரச தீா்வு மையம் உத்தரவு

Updated On : 21 ஜூலை 2026, 4:39 pm IST
நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை; சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கில் ஜூலை 28ஆம் தேதி மீண்டும் ஆஜராக தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கில் தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் இன்று ஆஜரானாா். எனினும், சொத்து மற்றும் குடும்ப பிரச்னை தொடர்பான சமர பேச்சுவார்த்தையில் இன்னமும் தீர்வு எட்டப்படாததால் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்த சமரச தீர்வு மையம் ஜூலை 28ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், புதுச்சேரியில் உள்ள அவரது சகோதரா் மற்றும் சகோதரரின் மனைவியைத் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் நேரில் ஆஜராக அமைச்சா் மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சா் மரிய வில்சன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சா் மரிய வில்சன் ஆஜராக விலக்களித்தது. மேலும், குடும்ப பிரச்னையாக இருப்பதால், சமரசத் தீா்வு மையத்தில் தீா்வுகாண அறிவுறுத்திய உயா்நீதிமன்றம், அமைச்சா் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரா் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோா் சமரச தீா்வு மையத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் கடந்த ஜூலை 15ஆம் தேதி நிதியமைச்சா் மரிய வில்சன், அவரது வழக்குரைஞா் ஹாஜா மொகிதீன் கிஸ்தி உடன் ஆஜராகியிருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சமரசப் பேச்சு நிறைவடையாததால், விசாரணை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதேன்படி, இன்றும், இரு தரப்பும் ஆஜராகினர், சமரச பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் ஜூலை 28ஆம் தேதி அமைச்சா் மரிய வில்சன் உள்ளிட்டோா் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

summary

Case regarding assault on brother: Finance Minister Maria Wilson ordered to appear again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments