FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவையில் 7 மணிக்கு வெளியிடப்பட்ட ஜன நாயகன்: ரசிகர்கள் உற்சாகம்

தமிழ்நாட்டிலேயே ஏழு மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் கோவை பிராட்வே திரையரங்கிற்கு ஆர்வமுடன் வருகை புரிந்த ரசிகர்கள் குறித்து...

Updated On : 23 ஜூலை 2026, 8:55 am IST
தமிழ்நாட்டிலேயே ஏழு மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் கோவை பிராட்வே திரையரங்கிற்கு ஆர்வமுடன் வருகை புரிந்த ரசிகர்கள் - டிஎன்எஸ்
பகிர்:

கோவை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டிலேயே ஏழு மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட பிராட்வே திரையரங்கிற்கு ரசிகர்கள் உற்சாகமாக வருகை புரிந்தனர்.

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வியாழக்கிழமை(ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.

Jananayakan' released - டிஎன்எஸ்

சட்டவிரோதமாக இணையத்தில் வெளியீடு தணிக்கை சான்றிதழ் பிரச்னை உள்ளிட்டவற்றையெல்லாம் கடந்து இறுதியாக திரையரங்குகளில் இன்று வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமாமும் காணப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் ஜனநாயகன் என கூறப்படும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சி கலந்த உணர்வுகளும் காணப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் கொண்டாட்ட நிகழ்வுகளில் ரசிகர்களும் தமிழக வெற்றிக்கழக கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் தமிழ்நாட்டிலேயே ஏழு மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் வருகை புரிந்தனர். சரியாக 7.5 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட்டது.

summary

Jananayakan' released at 7 AM in Coimbatore: Fans excited

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments