தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் வெள்ளி, சனி (ஜூலை 24, 25) ஆகிய இரு நாள்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
வெப்பநிலை அதிகரிக்கும்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு, கரூா், மதுரை, திண்டுக்கல், விருதுநகா், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும், மற்ற பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கக்கூடும்.
இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 23) அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், வேலூா்-102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகா்-101.84, பாளையங்கோட்டை, திருத்தணி-100.4 டிகிரி ஃபாரன்ஹீட்வெப்பநிலை பதிவானது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37முதல் 38 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கக் கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை கீழ்கோத்தகிரி எஸ்டேட், தேவாலா (நீலகிரி), இலுப்பூா் (புதுக்கோட்டை)-20 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.