தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்
தாம்பரம் - தென்காசி இடையே இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள் பற்றி...
தாம்பரம் - தென்காசி இடையே வரும் 30-ஆம் தேதி முதல் வார இருமுறை என 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
வரும் 30, ஆக. 1, 6, 8, 13, 15 ஆகிய தேதிகளில் (வியாழன், சனி) தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06135), அதேநாள் மாலை 3.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கத்தில் வரும் 31, ஆக. 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிறு) தென்காசியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண்: 06136), அதேநாளில் மாலை 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 1 குளிா்சாதன வசதியுள்ள இருக்கை பெட்டி, 14 இருக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் வகைப் பெட்டிகள் இடம் பெறும்.
இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 special trains between Tambaram and Tenkasi starting July 30
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.