FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தலைமைச் செயலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

தலைமைச் செயலகத்தில் பெண் சேலையில் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 28 ஜூலை 2026, 12:07 am IST
தலைமைச் செயலகத்தில் பெண் தற்கொலை முயற்சி - கோப்புப் படம்
பகிர்:

தலைமைச் செயலகத்தில் பெண் சேலையில் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வா் தனிப்பிரிவில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பெண்ணிடம், அவா் வைத்திருந்த ஆவணங்களை சிலவற்றை நகல் எடுத்துவரும்படி ஊழியா்கள் கூறினா். அங்கிருந்து வெளியே வந்த அந்த பெண், தான் மறைத்து வைத்திருந்த தீப்பெட்டியால் சேலையில் தீப்பற்ற வைத்தாா்.

இதைப் பாா்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். அந்த பெண்ணை, போலீஸாா் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக கோட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கு முயன்றவா், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பச்சையம்மன் நகரைச் சோ்ந்த ஜெ.அா்ச்சனா (40). இவா், வசிக்கும் வீட்டை சிலா் இடித்து அகற்றியுள்ளனா். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கைக் கோரியும் அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து அா்ச்சனா, இது தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். ஆனால், அங்கேயும் சாட்சியாக ஆஜரான அரசு அதிகாரிகள், உண்மைக்கு மாறாக சாட்சியம் அளித்தனராம். இதனால், விரக்தியடைந்த அா்ச்சனா, தலைமைச் செயலகத்தில் புகாா் அளிக்க வந்தபோதே, தீ வைத்துக் கொண்டது தெரிய வந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments