காவலர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!
காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் விஜய் கௌரவித்தார்.
காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் விஜய் கௌரவித்தார்.
காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் முதல்வர் விஜய் பட்டு வேஷ்டி சட்டையுடன் கலந்துகொண்டு காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகைளையும் முதல்வர் கண்டு மகிழ்ந்தார்.
Advertisement
Advertisement
முன்னதாக திறந்த ஜீப்பில் சென்று காவல் துறை அணிவகுப்பை பார்வையிட்ட முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல் துறை வாகனங்களின் சேவையையும் முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடலோர காவல் படைக்காக 42 மஹிந்த்ரா ஜீப், 96 ஹோண்டா இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 665 காவல் துறை அதிகாரிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Chief Minister C Joseph Vijay on Friday presented prestigious state and national medals to police, fire, and allied departmental personnel, and flagged off a new fleet of vehicles for the Coastal Security Group during a grand ceremonial parade here.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.