புதிய கட்சி? நாளை 12 மணிக்கு மனம் திறக்கிறேன் - அண்ணாமலை
கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என அண்ணாமலை பதிவு
தில்லி சென்று வந்த நிலையில், நாளை (ஜூன் 5) நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் மூலம் அண்ணாமலை உரையாடவுள்ளார். இதில் புதிய கட்சி அறிவிப்பு குறித்த தகவல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement