முகப்பு
தமிழ்நாடு

மத்திய அமைச்சர் பதவிக்காக அதிமுகவை பாஜகவுடன் இணைப்பாரா இபிஎஸ்?

அமைச்சர் பதவிக்காக பாஜகவுடனோ, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக திமுகவுடனோ அதிமுகவை இணைக்கும் நிலையில் இபிஎஸ் இருப்பதாக நிர்மல் குமார் விமர்சனம்

Updated On : 6 ஜூன் 2026, 3:04 pm IST
எடப்பாடி பழனிசாமி | நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக தலைமையின் மீதான நம்பிக்கையின்மையால்தான் அதிமுகவினர் தவெகவில் இணைவதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "அதிமுகவின் தலைமையில் ஸ்திரத்தன்மை இல்லை. அவர்களின் தலைமை என்ன செய்யப் போகின்றனர் என்பது தெரியவில்லை.

இன்னும் கொஞ்ச நாள்களில், எடப்பாடி பழனிசாமியே திமுகவில் இணையலாம் அல்லது கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிலையில்தான் அவர் இருக்கிறார்.

Advertisement

Advertisement

மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாக இருந்தால் பாஜகவுடனோ மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக இருந்தால் திமுகவுடனோ அதிமுகவை இணைக்கும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான் அவர் மீதும் கட்சியின் மீதும் நம்பிக்கையில்லாமல், கட்சி கைவிட்டு விட்டது என்றும், சுய லாபத்துக்காக எடப்பாடி பழனிசாமி இவ்வாறு செய்கிறார் என்றும் 40 - 50 ஆண்டுகளாக உழைத்த தொண்டர்களெல்லாம் மன வருத்தத்துடன் கட்சியிலிருந்து விலகி, இங்கு இணைகின்றனர்" என்று தெரிவித்தார்.

summary

Is Edappadi Palaniswami merging the AIADMK with the BJP for the sake of a Union Minister post?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.