மின் துறையில் 70,000 பணியாளர்கள் தேவை; 15,000 பேருக்கு உடனடி பணி ஆணை!
மின்துறையில் தாமதமின்றி பதவி உயர்வு வழங்கப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்து...
மின்சாரத் துறையில் உடனடியாக 1,5000 பேர் உடனடியாக பணியமர்த்தப்படவுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் இன்று (ஜூன் 8) தெரிவித்தார்.
மின்துறையில் தாமதமின்றி பதவி உயர்வுகள் வழங்கப்படுவதாகவும், நிலுவையில் உள்ளவர்களும் விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
Advertisement
Advertisement
''மின்சார துறையில் தாமதமின்றி பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும்.
மின் துறையில் சமீபத்தில் 300 உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மின் துறைக்கு மொத்தம் 70,000 பணியாளர்கள் தேவை. இதில், 1,5000 பேரை உடனடியாக பணியமர்த்த உள்ளோம்.
தவெக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதவி உயர்வுகள் கடந்த 45 ஆண்டுகளில் நடந்தது இல்லை. கொஞ்சநாள்கள் விட்டிருந்தால் மின் துறை முழுவதும் தனியார் மயமாகியிருக்கும்.
அமைச்சராகி ஒரு மாதம் ஆகிவிட்டது; ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை. இது மக்களுக்கான அரசு. மின்துறையில் உள்ள பிரச்னைகள் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என அமைச்சர் குறிப்பிட்டார்.
Electricity Department needs 7,0000 employees; immediate appointment orders for 1,5000 Minister for Electricity R. Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.