முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் மீண்டும் பொறுப்பு! துணைப் பொதுச் செயலராக எஸ்.பி. வேலுமணி நியமனம்!

அதிமுக துணைப் பொதுச் செயலராக எஸ்.பி. வேலுமணி நியமனம் செய்யபட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 25 ஜூன் 2026, 7:11 pm IST
எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி. வேலுமணி. - கோப்புப்படம்
பகிர்:

அதிமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக துணைப் பொதுச் செயலர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.சி. வீரமணி, திருத்தணி கோ.அரி, பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, மருதராஜா, சௌந்தரராஜன் ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலர்களாக எம். ஆர். விஜயபாஸ்கர், எம் மணிகண்டன், ஆ அருண்மொழிதேவன், சி. மகேந்திரன், என்.எஸ்.என். நடராஜ், எம். ரெத்தினசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய செயலர்களை நியமித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக, அதிமுகவில் நிலவிய உள்கட்சி பிரச்னை காரணமாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வந்தது.

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரை, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சிப் பதவியிலிருந்து நீக்கியிருந்த நிலையில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

summary

Former ministers and senior functionaries of the AIADMK who had previously been stripped of their party posts have been reinstated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments