முகப்பு
தமிழ்நாடு

கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி!

இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 27 ஜூன் 2026, 4:19 pm IST
இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.
பகிர்:

இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன்.

வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பாக்யராஜின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம்.

Advertisement

Advertisement

திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவர். எழுத்தாளர் – பத்திரிகையாளர் – நடிகர் - தயாரிப்பாளர் - பாடலாசிரியர் - இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் பதித்தவர்.

அண்மையில் மறைந்த பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்த அவர், தனது எழுத்தாற்றல் மூலம், குடும்ப உணர்வுகள் சார்ந்த கதைகளை நகைச்சுவையாகவும் – ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தினார். எண்ணற்ற அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையும் பாக்யராஜை சேரும்.

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட விழாவில் பங்கேற்று, கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், பாக்யராஜின் பெருமைகளைப் பேசினார்.

பாக்யராஜை இழந்து வாடும் அவரது துணைவியார்பூர்ணிமா பாக்யராஜ், சகோதரர் சாந்தனு, சகோதரி சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜின் புகழ் நிலைத்திருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

summary

Leader of the Opposition Udhayanidhi Stalin paid personal tribute to the mortal remains of director K. Bhagyaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments