முகப்பு
தமிழ்நாடு

ஜாக்பாட்! அடல் மாத ஓய்வூதிய தொகை உயர்த்தப்படுமா?

அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான அடல் மாத ஓய்வூதிய தொகை உயர்த்தப்படுகிறது என்பது பற்றி

அடல் மாத ஓய்வூதியம் - IANS
பகிர்:

நாட்டில் அமைப்பு சாரா மக்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் அடல் மாத ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மாத ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பணவீக்க சவால்களைச் சமாளிக்க, அடல் மாத ஓய்வூதியத் திட்டத்தில் ரூ. 5,000 என்ற உச்சவரம்பை அதிகரித்து வழங்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க, மறுபரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதாவது, அதிகபட்ச ஓய்வூதியத் தொகையான மாதத்திற்கு ரூ. 5,000 என்பதுகூட 15-20 ஆண்டுகளுக்குப் பிறகு போதுமானதாக இருக்காது என்று மக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுத்து, நடைமுறைக்கு வர சில காலம் ஆகும் என்றாலும் இது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

Advertisement

Advertisement

தற்போது அடல் மாத ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்திருக்கும் சந்தாதாரர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் மிகக்குறைந்த ஓய்வூதியப் பிரிவான ரூ. 1,000 பிரிவில் உள்ளனர். ஆனால், இந்தத் தொகை போதுமானது இல்லை என்பதால் சிறந்த ஓய்வூதியத்தை உறுதி செய்வதற்காக, இந்த பிரிவினரை ரூ. 5,000 பிரிவுக்கு மாற்றுவதும் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.