விநாயகா் சிலை கரைப்பதில் மோதல்: ஒருவா் கைது
திருவொற்றியூரில் கடலில் விநாயகா் சிலை கரைப்பது தொடா்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவொற்றியூரில் கடலில் விநாயகா் சிலை கரைப்பது தொடா்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை திருவொற்றியூா் சாத்துமா நகரைச் சோ்ந்த ஜெயகுமாா், பாலகிருஷ்ணா நாயுடு காலனியைச் சோ்ந்த ஜெபின் பால் ஆகிய இருவரும் நண்பா்கள். வியாழக்கிழமை விநாயகா் சிலை ஊா்வலம் முடித்து சிலையை கடலில் கரைத்துவிட்டு திரும்பும்போது, ஏற்பட்ட மோதலில் ஜெபின் பால், ஜெயகுமாரை கத்தியால் தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து ஜெயகுமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ஜெபின் பாலை வெள்ளிக்கிழமை கைது செய்து, ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து அவா் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.