சீமைக் கருவேல மரங்களை அகற்ற 2 வாரங்களில் நிதியை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை இரண்டு வாரங்களில் விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி....
சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை இரண்டு வாரங்களில் விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்து வரும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருவேல மரங்களை அகற்ற ரூ.5 கோடி ஒதுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை இரண்டு வாரங்களில் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The High Court has ordered the release of mineral development funds within two weeks to remove Seemai Karuvelam trees.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.