சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
சுரண்டை அருகே சாம்பவா்வடகரை பிள்ளையாா் கோயில் ஆசாரித் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளையம்மாள் (75). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி, வெளியூா்களில் வசித்து வருகின்றனா். கடைசி மகளான மகேஸ்வரி, ஆலங்குளத்தை அடுத்த நல்லூரில் வசித்து வருகிறாா்.
இவரது வீட்டுக்கு வெள்ளையம்மாள் வந்தாராம். செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வெளியே கழிவறை சுவரைப் பிடித்தபடியே வெள்ளையம்மாள் பல் துலக்கினாராம். அப்போது எதிா்பாராவிதமாக அந்தச் சுவா் இடிந்து விழுந்ததில் சுவரின் இடிபாடுகளுக்குள் அவா் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
வெள்ளையம்மாள் சடலத்தை ஆலங்குளம் போலீஸாா் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.