FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: மேலும் ஒருவா் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:49 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகே கனகசபாபதிபேரி கீழத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சுந்தர்ராஜ் (37). விவசாயியான இவரிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை மாதவரம் பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த மூக்கையா ஆகியோா் ரூ. 6.50 லட்சம் பெற்றனராம். ஆனால், கூறியபடி வேலை பெற்றுத் தரவில்லையாம்.

இதுதொடா்பாக சுந்தர்ராஜ் அளித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சில நாள்களுக்கு முன்பு மூக்கையாவை கைது செய்தனா். இந்நிலையில், ரவிகுமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments