FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:22 am IST
உயிரிழப்பு
பகிர்:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள மேல வயலியைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (74). இவா் சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். சனிக்கிழமை சைக்கிளில் சென்ற அவா் மணலூா் விலக்கில் திரும்பியபோது, காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து, கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments