FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கீழப்பாவூா், அச்சன்புதூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Updated On : 20 ஜூலை 2026, 5:24 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் மற்றும் அச்சன்புதூா் உப மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து, தென்காசி கோட்ட செயற் பொறியாளா் ஏ. ஸ்ரீ வனஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழப்பாவூா், அச்சன்புதூா் உப மின் நிலையங்களுக்குள்பட்ட பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப் புதூா், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசி தா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூலை 21ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments