ரூ. 33 லட்சம் நிதி இழப்பு: களப்பாகுளம் ஊராட்சித் தலைவா் பதவி நீக்கம்!
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், களப்பாகுளம் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், களப்பாகுளம் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டாா்.
களப்பாகுளம் ஊராட்சித் தலைவராக பணியாற்றியவா் வே. சிவசங்கரி. இவா் தனது கடமையைச் செய்யத் தவறியதாலும், அரசுக்கு ரூ. 33,33,720 நிதி இழப்பு ஏற்படுத்தியதாலும், தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994, பிரிவு 205 (11)-இன்படி பதவி நீக்கம் செய்யப்படுகிறாா் என ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.