கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை கோரி புளியறையில் சாலை மறியல்: 35 போ் கைது
கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரி, புளியறையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
தமிழக - கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடி வழியாக கேரளத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
அண்மைக்காலமாக இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், புளியறை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
Advertisement
Advertisement
எனவே, அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே. ரவி அருணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜமீன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஜோசப் ரத்தினம், சாா்லஸ், இசக்கிசெல்வன், வீரமணி, ராஜேஷ், சுடலை, பொதுமக்கள் பங்கேற்றனா். 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.