FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஸ்ரீபெரும்புதூரில் தயாராகும் ஐபோன் 14: ஃபாக்ஸ்கான் அறிவிப்பு

ஆப்பிள் தனது புதிய ஐபோன் 14-ஐ ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி விரைவில்  தொடங்கப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On : 26 செப்டம்பர் 2022, 12:32 pm IST
பகிர்:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14-ஐ விரைவில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் செப்டம்பர் 7ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐஃபோனை, இவ்வளவு விரைவாக இந்தியாவில் உற்பத்தி செய்ய முன்னெடுத்திருப்பது, மிக முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

புதிய ஐபோன் 14 வரிசையானது தரைவழி தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான பாதுகாப்பு திறன்களை அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் 14-ஐ இந்தியாவில் தயாரிப்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாக ஒரு அறிக்கையில் டோய் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள், உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் ஐபோன் 14 விலையில் மாற்றம் இருக்காது.

தற்போது ஆப்பிள் நிறுவனம்,  இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கும்  3 உலகளாவிய உற்பத்தி கூட்டாளர்களைக் கொண்டுள்ளது. இவை விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான்.

ஆப்பிள் நிறுவனம் 2017 இல் ஐபோன்எஸ்இ மூலம் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. தற்போது, ஆப்பிள் ஐபோன் எஸ்இ, ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 ஆகியவற்றை இந்தியாவில் தயாரிக்கிறது. மூன்று கூட்டாளர்களும் அரசாங்கத்தின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் உற்பத்தி நன்மைகளை அனுபவிக்கின்றனர்.

வலுவான உற்பத்தி நடவடிக்கைகளை கொண்ட சீனாவிற்கு மத்தியில் இந்தியாவில் வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் பெரும் உற்பத்தியை  சீனா கொண்டுள்ளது மற்றும் ஆப்பிள் அதன் 95% பொருட்களை டிராகன் லேண்டில் இருந்து பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments