முகப்பு
வணிகம்

சற்றே சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Updated On : 9 டிசம்பர் 2024, 11:05 am IST
பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்
பகிர்:

பங்குச் சந்தை இன்று சற்றே (டிச. 9) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

கடந்த 2 வாரங்களாக உயர்ந்த பங்குச்சந்தை இன்று சற்றே சரிவுடன் தொடங்கியுள்ளது. மதியத்திற்கு மேல் புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,602.58 என்ற புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது.

Advertisement

Advertisement

காலை 10.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 81458.22 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 44 புள்ளிகள் சரிந்து 24,633.90 புள்ளிகளில் தொடங்கியது. காலை 10.50 மணி நிலவரப்படி நிஃப்டி 24,594.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா, டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் விலை சற்றே குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments