கோப்புப் படம் 
வணிகம்

பங்குச்சந்தை வீழ்ச்சி! 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வு!

வாரத்தின் முதல் நாளான இன்று (பிப். 5) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. 

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று (பிப். 5) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 354.21 புள்ளிகள் சரிந்து 71,731.42 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.49 சதவிகிதம் சரிவாகும். 

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.10 புள்ளிகள் சரிந்து 21,771.70 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது 0.38 சதவிகிதம் சரிவாகும்.

பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. அதில் அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 5.46 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சன் பார்மா 3.29 சதவிகிதமும், எம் & எம் 2.33 சதவிகிதமும், பவர் கிரிட் 2.18 சதவிகிதமும் டாடா ஸ்டீல் பங்குகள் 2.01 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

இதேபோன்று பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக சரிவை சந்தித்தது. 3.53 சதவிகிதம் வரை சரிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT