வணிகம்

பங்குச்சந்தை வீழ்ச்சி! 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வு!

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று (பிப். 5) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 354.21 புள்ளிகள் சரிந்து 71,731.42 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.49 சதவிகிதம் சரிவாகும். 

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.10 புள்ளிகள் சரிந்து 21,771.70 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது 0.38 சதவிகிதம் சரிவாகும்.

பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன. அதில் அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 5.46 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சன் பார்மா 3.29 சதவிகிதமும், எம் & எம் 2.33 சதவிகிதமும், பவர் கிரிட் 2.18 சதவிகிதமும் டாடா ஸ்டீல் பங்குகள் 2.01 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

இதேபோன்று பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக சரிவை சந்தித்தது. 3.53 சதவிகிதம் வரை சரிந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT