FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்வு! ரூ. 86.40

கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் ரூபாய் மதிப்பு 0.3% உயர்ந்ததுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Updated On : 15 ஜனவரி 2025, 6:59 pm IST
ரூபாய் மதிப்பு.. - PTI
பகிர்:

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 15) 13 காசுகள் உயர்ந்து ரூ. 86.40 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய வணிக நேர முடிவில் 17 காசுகள் சரிந்து ரூ. 86.53 காசுகளாக இருந்த நிலையில், இன்று 13 காசுகள் உயர்ந்துள்ளது.

கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு ரூபாய் மதிப்பு, ஒரே நாளில் 0.3% உயர்ந்ததுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.50 ஆகத் தொடங்கி அதிகபட்சமாக ரூ. 86.55 வரை சென்றது. இது நேற்றைய வணிக நேர முடிவை விட கடுமையான சரிவாகும்.

பிற்பாதியில் படிப்படியாக ரூபாய் மதிப்பு உயர்ந்து ரூ. 86.28 காசுகளாக இருந்த நிலையில் வணிக நேர முடிவில் ரூ. 86.40 காசுகளாக நிலைப்பெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், உள்ளூர் பங்குகளும் நேர்மறையாக இருந்ததால், ரூபாய் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இதேபோன்று சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையும் 0.35 சதவீதம் அதிகரித்து 80.20 டாலர்களாக வணிகமானது.

பங்குச் சந்தை ஏற்றம்

ரியாலிடி மற்றும் ஐடி துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எனினும் ஆற்றல், பார்மா, ஆட்டோ துறை பங்குகள் சரிவுடன் இருந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 224.45 புள்ளிகள் உயர்ந்து 76,724.08 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.29 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37.15புள்ளிகள் உயர்ந்து 23,213.20 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.16 சதவீதம் உயர்வாகும்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments