FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

அதானி வில்மர் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டில், இரண்டு மடங்கு அதிகரித்து, ரூ.410.93 கோடி ஆக உள்ளது.

Updated On : 27 ஜனவரி 2025, 7:23 pm IST
பகிர்:

புதுதில்லி: அதானி வில்மர் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டில், இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.410.93 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.200.89 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.12,887.21 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,926 கோடியானது.

சமையல் எண்ணெய் பிரிவின் வருவாய் ரூ.9,710.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.13,386.71 கோடியானது. அதே வேளையில் உணவு மற்றும் எஃப்எம்சிஜி பிரிவின் வருவாய் ரூ.1,273 கோடியிலிருந்து ரூ.1,558 கோடியாகவும், தொழில்துறை அத்தியாவசிய வருவாய் ரூ.1,844.12 கோடியிலிருந்து ரூ.1,914.59 கோடியாகவும், செலவினம் ரூ.12,606.26 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,379.76 கோடியானது.

Advertisement

Advertisement

இது குறித்து அதானி வில்மர் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அங்ஷு மாலிக் கூறியதாவது:

நிறுவனம் கடந்த ஐந்து காலாண்டுகளாக வலுவான லாபத்தை பதிவு செய்து வருகிறது. அதே வேளையில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனளிப்புக்கு முன் வருவாய் ரூ.792 கோடியாகவும் மற்றும் வரிக்கு பிந்தைய லாபம் ரூ 411 கோடியாக உள்ளது என்று தெரிவித்தது.

கடந்த பன்னிரண்டு மாதங்களாக இ-காமர்ஸ் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 41% வளர்ச்சியடைந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் பிராண்டட் தயாரிப்புகளில் ஆண்டுக்கு ஆண்டு 15% வளர்ச்சியுடன், தென்னகத்தில் வலுவாக அடியெடுத்து வைத்துள்ளது.

நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் ரூ.5.06 சதவிகிதம் உயர்ந்து ரூ.264.60 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

இதையும் படிக்க: கனரா வங்கியின் லாபம் 12% உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments