இங்கிலாந்துக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்த இந்தியா!
சர்வதேச அளவில் புகழ்பெற்றவை அம்ரபாலி மாம்பழங்கள்.
புதுதில்லி: சர்வதேச அளவில் புகழ்பெற்றவை அம்ரபாலி மாம்பழங்கள். இந்த பழங்கள் அவற்றின் சிறப்பான சுவை மற்றும் நறுமணத்திற்காக அறியப்படும் நிலையில், ஜார்கண்டிலிருந்து 1.5 டன் 'அம்ரபாலி' மாம்பழங்களை இங்கிலாந்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் இன்று தெரிவித்தது.
ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள பெண்களை மையமாக கொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனமான பியூரா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகின்றன.
இந்த மாம்பழங்கள் ஜூன் 4ஆம் தேதியன்று கொல்கத்தாவிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது.
Advertisement
Advertisement
summary