இங்கிலாந்துக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்த இந்தியா!
சர்வதேச அளவில் புகழ்பெற்றவை அம்ரபாலி மாம்பழங்கள்.
புதுதில்லி: சர்வதேச அளவில் புகழ்பெற்றவை அம்ரபாலி மாம்பழங்கள். இந்த பழங்கள் அவற்றின் சிறப்பான சுவை மற்றும் நறுமணத்திற்காக அறியப்படும் நிலையில், ஜார்கண்டிலிருந்து 1.5 டன் 'அம்ரபாலி' மாம்பழங்களை இங்கிலாந்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் இன்று தெரிவித்தது.
ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள பெண்களை மையமாக கொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனமான பியூரா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகின்றன.
இந்த மாம்பழங்கள் ஜூன் 4ஆம் தேதியன்று கொல்கத்தாவிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது.
Advertisement
Advertisement
India has exported 1.5 tonnes of fresh Amrapali mangoes from Jharkhand to the UK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.