இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு!
நாட்டின் சரக்கு ஏற்றுமதி சுமார் 15 சதவீத வளர்ச்சி பதிவு செய்ததாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுதில்லி: உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே மாதம் வரையான காலத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி சுமார் 15 சதவீத வளர்ச்சி பதிவு செய்ததாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சகம் மே மாதத்திற்கான வர்த்தகத் தரவுகளை ஜூன் 15 அன்று வெளியிடும் நிலையில், இவ்விரு மாதங்களில் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்ததன் விளைவாக, ஏப்ரல் மாத ஏற்றுமதி 13.78 சதவீதம் அதிகரித்து 43.56 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்ததுள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச ஏற்றுமதி அளவாகும். இருப்பினும், இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறை 28.38 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement