பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு; ரியல் எஸ்டேட், ஆட்டோ பங்குகள் லாபம்!
இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...
நேற்று பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்த நிலையில் இன்று (ஜூன் 12) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,709.27 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 819 புள்ளிகள் உயர்ந்து 74,633.17 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 208.10
புள்ளிகள் உயர்ந்து 23,369.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.25 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 1.74 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
நிஃப்டி 50 பங்குகளில் இன்டர்குளோப் ஏவியேஷன், எட்டர்னல், ஸ்ரீராம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்துள்ளன.
துறைவாரியாக நிஃப்டி ரியல் எஸ்டேட், ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்ந்தும் ஐடி, பார்மா பங்குகள் சரிந்தும் வருகின்றன.
சென்செக்ஸில் 30 பங்குகளில் டெக் மஹிந்திரா தவிர மற்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2% குறைந்து 88.39 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா குறைந்து 95.38 ஆக உள்ளது.
Stock Market: Sensex surgess 800, Nifty around 23,350
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.