ஹை-டெக் ஃப்ளோ சொல்யூஷன்ஸ் ரூ. 300 கோடி ஐபிஓ அறிவிப்பு!
ஹை-டெக் ஃப்ளோ சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஐபிஓ மூலம் நிதி திரட்ட, செபியிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.
புதுதில்லி: ஹை-டெக் ஃப்ளோ சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஐபிஓ மூலம் நிதி திரட்ட, செபியிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.
பொதுப் பங்கு வெளியீட்டிற்கு முன்பாக, தனியார் முதலீட்டாளர்கள் மூலம் ரூ. 60 கோடி வரை நிதி திரட்டுவது குறித்து நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்த நிதி திரட்டப்பட்டால், புதிய பங்கு வெளியீட்டு இலக்கான ரூ. 300 கோடியில் இருந்து இத்தொகை அதற்கேற்ப குறைக்கப்படும்.
சுமார் ரூ. 126 கோடி மதிப்பிலான புதிய வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதி, அதன் தற்போதைய நாக்பூர் ஆலையில் ஏபிஐ-தர எச்.எஸ்.ஏ.டபிள்யூ. (HSAW) குழாய் உற்பத்தி செய்ய உள்ளிட்ட பல பிரிவுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
ரூ. 90 கோடி கடன் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் என்ற நிலையில், மேலும் ஒரு பகுதி பொது நிறுவன நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும்.
Hi-Tech Flow Solutions Ltd has filed preliminary papers with markets regulator Sebi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.