FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கல்வி மணி

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 28

எழுத்திலக்கணம். சொல்லிக்கணம் ஆகிய இரண்டிலும் கூறப்படாத பொதுவான செய்திகள் சொல்லப்படுவதால் இது

Updated On : 2 ஜனவரி 2015, 4:11 pm IST
பகிர்:

இலக்கணம்

* எழுத்திலக்கணம். சொல்லிக்கணம் ஆகிய இரண்டிலும் கூறப்படாத பொதுவான செய்திகள் சொல்லப்படுவதால் இது பொது என அழைக்கப்படுகிறது.

1. வெளிப்படை, குறிப்பு

Advertisement

Advertisement

* வெளிப்படையாகத் தன்பெருளை உணர்த்தும் சொல் வெளிப்படை எனவும், ஒரு தெடர் முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் குறிப்பால் ஒரு பொருளைத் தருவது குறிப்பு எனவும் கூறுவர்.

எ.கா:

* உலகிலேயே பண்பாட்டில் தமிழ்நாடுதன் தலைசிறந்து விளங்குகின்றது.

* பூப்பந்து விளையாட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது.

* இவ்விரு தொடர்களிலும் முதல் தொடரில் தமிழ்நாடு என்னும் சொல் வெளிப்படையாக இடத்தைக் குறித்து வந்துள்ளது.

* இரண்டாம் தொடரில், தமிழ்நாடு என்பது ஆகுபெயராய் நின்று குறிப்பால் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களைக் குறிக்கிறது.

2. குறிப்புச்சொற்கள்

* ஒன்றொழி பொதுச்சொல், விகாரச்சொல், தகுதிவழக்குச்சொல், ஆகுபெயர், அன்மொழித்தொகை, வினைக்குறிப்புச் சொல், முதற்குறிப்புச் சொல், தொகைக்குறிப்புச்சொல் போன்றவை குறிப்பால் தரும் சொற்களாம்.

ஒன்றொழி பொதுச்சொல்

* உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டிலும் பொதுவான சொற்கள் உண்டு.

* ஒரு சொல், தொடரில் முன்னும் பின்னும் வரும் சொற்களின் தொடர்பாலும், குறிப்பாலும் ஒரு பாலை நீக்கி, மற்றொருபாலைச் சுட்டும். அதற்கு ஒன்றொழி பொதுச்சொல் என்று பெயர்.

3. இனங்குறித்தல்

* ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும்.

எ.கா: கதிர்வேல் வெற்றிலை தின்றான்.

* இத்தொடரில் கதிர்வேல் வெற்றிலை மட்டுமா தின்றான். வெற்றிலையோடு அதற்கு இனமான பாக்கு, சுண்ணாம்பு முதலானவற்றையும் சேர்த்துத் தின்றான் எனப் பொருள்படுகிறது.

4. அடுக்குத்தொடர்

* அசைநிலைக்கும், விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளில் இசையை நிறைவு செய்வதற்கும் இரண்டு, மூன்று, நான்குமுறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.

* அன்றே அன்றே - அசைநிலை

* போ போ - விரைவு

* எறி எறி - சினம்

* வருக வருக - மகிழ்ச்சி

* தீ தீ தீ - அச்சம்

* நொந்தேன் நொந்தேன்  - துன்பம்

* கோடி கோடி கோடி கோடியே - இசை நிறை

5. இரட்டைக்கிளவி

* இரட்டித்து நின்று பொருள் உணர்த்தும் சொற்கள் இரட்டித்தே வரும்; பிரித்தால் பொருள் தராது; இதனை இரட்டைக்கிளவி என்பர்.

* அடுக்குத்தொடருக்கும் இரட்டைக்கிளவிக்கும் உள்ள வேறுபாடு

அடுக்குத்தொடர்  - இரட்டைக்கிளவி

1. சொற்கள் தனித்தனியே நிற்கும் - சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்

2. பிரித்தால் பொருள் தரும் - பிரித்தால் பொருள் தராது.

3. இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்  -  இரட்டித்தே வரும்.

4. விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி  - இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்.

தமிழ்ப்பழமொழிகள்:

* Money makes many things - பணம் பத்தும் செய்யும்

* Eagles don't catch files - புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

* Old is gold - காலம் பொன் போன்றது

* Prevention is better than cure - வருமுன் காப்பதே சிறந்தது.

* Solw and steady wins the race - முயற்சி திருவினையாக்கும்.

நற்றிணை

- மிழைகிழான் நல்வேட்டனார்

சொற்பொருள்:

* அரி - நெற்கதிர்

* செறு - வயல்

* யாணர் - புதுவருவாய்

* வட்டி - பனையோலைப் பெட்டி

* நெடிய மொழிதல் - அரசிடம் சிறப்புப் பெறுதல்

இலக்கணக்குறிப்பு:

* சென்ற வட்டி - பெயரெச்சம்

* செய்வினை - வினைத்தொகை

* புன்கண், மெய்கண் - பண்புத்தொகைள்

* ஊர(ஊரனே) - விளித்தொடர்.

பிரித்தறிதல்:

* அங்கண் - அம் + கண்

* பற்பல - பல + பல

* புன்கண் - புன்மை + கண்

* மென்கண் - மென்மை + கண்

ஆசிரியர் குறிப்பு:

* மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், கிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.

* இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.

* இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல் உள்ளன.

* இவர் சங்ககாலத்தவர்.

நூற்குறிப்பு:

* பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுவன.

* எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும், "நல்" என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படுவதும் நற்றிணையே.

* இஃது அகத்திணை நூலாகும்.

* நற்றிணை பல்வேறு காலங்களில் புலவரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல்.

* ஓரறிவு உயிரிகளையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.

* ஐந்திணைக்குமான பாடல் உள்ளன.

* இதில் உள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை.

* இப்பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.

* நற்றிணைப் பாடல்கள் நானூறு.

* பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்

* பாடப்பகுதி - நற்றிணையிலுள்ள இருநூற்றுப் பத்தாவது பாடல்.

புறநானூறு

- கண்ணகனார்

* துகிர் - பவளம்

* மன்னிய - நிலைபெற்ற

* சேய - தொலைவு

* தொடை - மாலை

* கலம் - அணி

* பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் - எண்ணும்மைகள்

* மாமலை - உரிச்சொற்றொடர்

* அருவிலை, நன்கலம் - பண்புத்தொகைகள்

* அருவிலை - அருமை + விலை

* நன்கலம் - நன்மை + கலம்

ஆசிரியர்குறிப்பு:

* கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.

* கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபொழுது, பிசிராந்தையாரின் வருகைக்காக் காத்திருந்தான்.

* அப்போது, அவருடன் இருந்தவர் கண்ணகனார் ஆவார்.

* அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடைப் பாடினார்.

* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.

* இது, புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.

* இந்நூல் சங்ககால மக்களின் வாழ்க்கைநிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.

* தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது.

* பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல் - இருநூற்றுப் பதினெட்டாம் பாடல்

உரைநடை: பேச்சுக்கலை

* ஆய கலைகள் அறுபத்து நான்கு

* நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை - பேச்சுக்கலை

* மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் - தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் முதலியோர்.

* மேடைப்பேச்சில் உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.

* மேடைப்பேச்சின் முக்கூறுகள் - எடுத்தல், தொடுத்தல், முடித்தல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments