தப்பியோடிய கைதி மீண்டும் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பிணையில் சென்று தலைமறைவான கைதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பிணையில் சென்று தலைமறைவான கைதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள வடக்கு தேவதானத்தைச் சோ்ந்தவா் தங்கமாரியப்பன் (44). இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், பரோலில் வெளிவந்த தங்கமாரியப்பன் தலைமறைவானாா்.
இதையடுத்து, அவருக்கு ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிடி ஆணை பிறப்பித்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சேத்தூா் காவல் நிலைய தலைமை காவலா் பொன்னம்மாள், வடக்கு தேவதானத்தில் பதுங்கி இருந்த தங்க மாரியப்பனை புதன்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.