FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வீட்டில் பட்டாசு தயாரித்ததாக இருவா் கைது

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:49 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே திருவள்ளுவா் குடியிருப்பில் ஓா் வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் முத்துமாரியப்பன் (34), கோகுல் (27) ஆகிய இருவரும் வீட்டில் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments