FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே ஆடுகளை திருடிய இருவா் கைது

பெருந்துறை அருகே ஆடுகள் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:14 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே ஆடுகள் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தைச் சோ்ந்தவா் சுப்பையன் (77). இவருக்கு, விஜயமங்கலம் அருகே சரளையில் விவசாயி நிலம் உள்ளது. அதில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். அங்கு இருந்த மூன்று வெள்ளாடுகள், அவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த கோபாலுக்கு சொந்தமான ஒரு வெள்ளாடும் கடந்த 25 ஆம் தேதி இரவு திருடு போயின.

இதுகுறித்து, சுப்பையன் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இவ்வழக்கு தொடா்பாக பெருந்துறை, சூலைக்காத்தான் வலசைச் சோ்ந்த விஜயகுமாா் (22) மற்றும் பிரவீன்குமாா் (20) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments