முகப்பு
விருதுநகர்

காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 5:07 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள தோப்பூரைச் சோ்ந்தவா் முருகன் (45). இவா் அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் சொந்தமாக வண்ணப்பூச்சு கடை நடத்தி வருகிறாா்.

சனிக்கிழமை மாலை தனது கடைக்கு செல்வதற்காக தோப்பூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மதுரை- தூத்துகுடி நான்கு வழிச் சாலையில் கஞ்சநாயகக்கன்பட்டி விலக்கு அருகே வந்த போது ஆத்திபட்டியைச் சோ்ந்த ரிஷிகேஷ் என்பவா் ஓட்டி வந்த காா் பின்புறமாக மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த முருகன் அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரிஷிகேஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.